முகத்தில் புள்ளிகள், கறைகள் மற்றும் பளபளப்பான சருமம் இருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களைன் ஆசையாகும். வெண்மையான சருமத்தை பெற சந்தையில் பல பொருட்கள் கிடைக்கின்றது, ஆனால் அவைகள் நம்பமுடியாத அளவிற்கு விலை உயர்ந்தவை மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கலக்கப்படுகின்றது. இதனால் தான் வீட்டு வைத்தியத்திற்கு மக்கள் செல்கின்றனர். அவை சருமத்தில் பயன்படுத்த பாதுகாப்பானவை மட்டுமல்ல செலவும் பெரிய அளவில் இருக்காது. சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும், பிரகாசமாக்கவும் உதவும் பொருட்களை பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு
சருமத்தை பிரகாசமாக்க இயற்கையான வழிகளில் ஒன்று எலுமிச்சை சாறு. இவை சருமத்தை பிரகாசிக்க செய்து, பளபளப்பான நிறத்தை தரக்கூடியது. எலுமிச்சை சாற்றை பிழிந்து எடுத்துக்கொண்டு, அதனை தோலில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் விடவேண்டும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். எலுமிச்சை சாறு அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும், எனவே இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.
பச்சை பால்
எளிய தந்திரத்தின் மூலம் பளபளப்பான சருமத்தை பெறலாம் என்றால் பாலில் ஒரு ரகசிய மூலப்பொருளாக இருக்கிறது. லாக்டிக் அமிலம் பாலில் இருப்பதால் நிறத்தை மெதுவாக உரிந்து பிரகாசமாக்குகிறது. ஒரு பருத்தி துணியை பாலில் நனைத்து, அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் விடவேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழிவினால் சருமம், மென்மையான, பிரகாசமான தோற்றம் அளிக்கும்.
தயிர்
மேலும் படிக்க: வாட்டி வதைக்கும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாகவும் பிரகாசமாகவும் மாற்றி, மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. குளிர்வைக்கப்பட்ட தயிரை 15-20 நிமிடங்கள் தடவ வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
தேன்
தேன் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற சக்திகள் கொண்டவை, அதுமட்டுமின்றி ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. சுத்தமான தேனை சருமத்தில் தடவி 10-15 நிமிடங்களுக்கு விடவேண்டும். அதன்பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
வெள்ளரிக்காய்
மேலும் படிக்க: உடையாமல் வழுவழுவென முடி நீண்டு வளர சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஹேர் மாஸ்க் பலன் தரும்
வெள்ளரிகள் இயற்கையான ப்ளீச்சிங் விளைவைக் கொண்டு இருப்பதால் சருமத்தின் நிறத்தை சமன் செய்ய உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காயை நறுக்கி, அதனை அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 15-20 நிமிடங்கள் முகத்தில் ஓய்வெடுக்க விடவேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation