தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான இளம் பெண்களின் மிகப்பெரிய கனவு என்பது தங்களின் முகம் அழகாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு கூட்டத்தில் கூட தங்களின் முகமும் உடல் மொத்தமும் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக சிறுவயதிலிருந்தே பெண்கள் தயாராகி வருவதை உங்களால் பார்த்திருக்க முடியும். ஏனென்றால் அழகு என்பது பெண்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். இதற்காக இளம் வயது பெண்கள் எப்படியாவது அழகாக வேண்டும் என்பதற்காக, ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்களை விலை அதிகமாக கொடுத்து வாங்கி நாள் கணக்கில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதேபோல் விலை உயர்ந்த சலூன் பார்லர்களுக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை மட்டும் தங்களின் முக அழகிற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், இத்தனை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் பெண்கள் எதிர்பார்த்த அழகு கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நிலைத்து இருப்பதில்லை.
பெண்களின் முக அழகு
இது போன்ற நேரங்களில் எப்போதுமே ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்கள், சலூன், பார்லர்களை மட்டும் நம்பி இருக்காமல் சில இயற்கையான வீட்டு வைத்தியங்களை வைத்து உங்கள் முகத்தை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளலாம். குறிப்பாக முகத்தில் வரும் தேவையற்ற முடிகள், கருப்பு தழும்புகள், முகப்பருக்கள் ஆகியவற்றை போக்க முடியும். இதேபோல் முகத்தில் வாயின் இரு ஓரங்களிலும் ஒரு சிலருக்கு கருப்படைந்து இருக்கும். முழங்கை, முழங்கால்கள் கூட அடர் கருப்பு நிறத்தில் இருக்கும். இதனால், பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை கூட அணிய முடியவில்லை என்று புலம்புவதை பார்த்திருக்கிறோம்.
பெண்களின் ஒட்டுமொத்த அழகு பிரச்சனையை சரி செய்ய இந்த பதிவில் இயற்கையான வீட்டு வைத்தியம் உள்ளது. வெறும் ஐந்து ரூபாயில் முகத்தின் ஆங்காங்கே இருக்கும் கருப்பு தழும்புகள், அதே போல் வாயின் ஓரத்தில் இருக்கும் கருப்பு தழும்புகள், முழங்கை முழங்கால்கள் ஆகிய இடத்தில் இருக்கும் கருப்பு தழும்புகளை போக்க சில முக்கியமான வீட்டு வைத்தியம் இதில் உள்ளது. அதை என்ன எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- பசு நெய்
- மஞ்சள் சிறிதளவு
- சுத்தமான பன்னீர்
செய்முறை
- சொரசொரப்பான இடத்தில் ஒரு டீஸ்பூன் சுத்தமான பசி நெய்யை போடவும்.
- அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவும்.
- மஞ்சள் நெய் இரண்டையும் நன்றாக கிளறி கலக்கவும்.
- அதனுடன் எடுத்து வைத்த சுத்தமான பன்னீரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு பேஸ்ட் போல தயாரான பின்பு அதை உங்கள் வாயில் இரு ஓரத்தில் கருப்பாக இருக்கும் இடத்தில் மெதுவாக தடவுவோம்.
- அதேபோல் முழங்கை முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும்.
- ஒரு 15 நிமிடம் உலர வைத்துவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் அதை கழுவவும்.
- இதே போல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு செய்து வந்தால் கருமையான முழங்கை முழங்கால் வாய் பிரச்சனை சரியாகி சாதாரண தோல் நிறத்தில் மாறிவிடும்.
முகத்திற்கு பன்னீர் நன்மைகள்
- ரோஸ் வாட்டரில் வயதான எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்கிறது.
- நீங்கள் பயன்படுத்தும் பல அழகு சாதனப் பொருட்களில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது.
- இது வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சருமத்தை எரிச்சலூட்டும் தோல் பிரச்சினைகளை நீக்குகிறது.
- தினமும் உங்கள் சருமத்தில் ரோஸ் வாட்டரைத் தெளிப்பதன் மூலமோ அல்லது ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்துவதன் மூலமோ இளமையான சருமத்தை அடையலாம்.
முகத்திற்கு மஞ்சள் நன்மைகள்
மஞ்சள் மாயாஜால பண்புகளைக் கொண்டுள்ளது என்பது உண்மைதான். இது உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் நன்மை பயக்கும். அதனால்தான் மஞ்சளை முடிந்தவரை உணவு மற்றும் பயன்பாட்டில் பயன்படுத்துவது நல்லது. மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. கருமையான நிறத்துடன், மஞ்சள் முகப்பரு, தழும்புகள் மற்றும் பிற தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிகவும் துல்லியமாக செயல்படுகிறது. மஞ்சள் ஒவ்வொரு வீட்டு மசாலாப் பொருட்களிலும் உள்ளது மற்றும் அதன் பிரகாசமான மஞ்சள் நிறம் உங்கள் உணவின் நிறத்தை மாற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் அதற்கு அழகைத் தருகிறது.
ஒரு வாரத்தில் முகத்தை பொலிவு படுத்த இயற்கையான பேஸ் பேக்
ஃபேஸ் பேக் செய்ய என்ன தேவை?
- மஞ்சள் - 2 தேக்கரண்டி
- ஆரஞ்சு தோல் - 1
- உருளைக்கிழங்கு - 1/2 துண்டுகள்
- காபி - 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
- தேன் - 2 தேக்கரண்டி
ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
- முதலில், வாணலியை சூடாக்கி, 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- மஞ்சள் கருப்பாக மாறியதும், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து, காபி, ஒரு ஆரஞ்சு தோல், பாதி உருளைக்கிழங்கு மற்றும் காபி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்தக் கலவையை மிக்சியில் போட்டு ஒரு பேஸ்ட் தயார் செய்து, பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த கருப்பு நிற பேக்கை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலர விடவும்.
- நேரம் முடிந்ததும், உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.
மஞ்சள், காபி மற்றும் கடலை மாவு ஆகியவற்றை கலக்கவும்
சருமப் பொலிவுக்கு, 1 டீஸ்பூன் கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் அரை டீஸ்பூன் காபி சேர்த்து கலந்து, தேவைக்கேற்ப ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். இது சருமத்தை உரிந்து, இறந்த சரும செல்களை அகற்றும்.
அரிசி மாவு, கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தடவவும்
சருமத்தை மென்மையாக்க, அரிசி மாவுடன் கற்றாழை ஜெல்லை கலந்து, சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை தடவவும். இதனால் சருமம் வயதானதைத் தடுக்கலாம்.
முல்தாலி மிட்டியில் மஞ்சள் மற்றும் பால் கலக்கவும்
சருமத்தில் ஏற்படும் வறட்சியைக் குறைக்க, முல்தாலி மிட்டியை மஞ்சள் மற்றும் பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இப்போது அதை முகத்தில் தடவி விட்டு விடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க:கண்களுக்கு கீழே கருப்பான, ஆழமான குழிகள் - 5 ரூபாயில் ஐந்தே நாளில் சரி செய்யலாம்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள்.
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation