தற்போதைய நவீன காலத்து பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. தொடர்ந்து தலைமுடி உதிர்ந்து வருவதால் பெரும்பாலான பெண்கள் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பியூட்டி பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் தலைமுடி உதிர்வுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மேலும் படிக்க: 25 வயது பெண்கள் முகத்தை அழகுப்படுத்த, எந்த சீரம் தடவுவது நல்லது? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
குறிப்பாக தற்போதைய நவீன காலத்தில் 25 வயதிலிருந்து இருக்கக்கூடிய இளம் பெண்களுக்கு கூட முன் தலையில் வழுக்கை திட்டுகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு முழுவதுமாக அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் சில இயற்கையான பொருட்களை வைத்து முன் வழுக்கை திட்டுகளில் மீண்டும் முடியை வளர செய்யலாம். இந்த பதிவில் இரண்டு இயற்கையான பொருட்களை தண்ணீரில் கலந்து ஒரு இயற்கை செய் முறையை நீங்கள் செய்யப் போகிறீர்கள். அது உங்கள் முன் தலையில் உள்ள வழுக்கை திட்டுகளை சரி செய்து மீண்டும் முடியை வளரச் செய்யும். இந்த பதிவில் உள்ள தயாரிப்பு செய்முறை உங்களுக்கு கட்டாயம் நல்ல முடிவுகளை தரும்.
தவறான உணவு முறை பழக்கவழக்கம். குறிப்பாக ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பியிருப்பது. பெரும்பாலும் முடி உதிர்தல் பிரச்சனை தலையின் மேற்புற பகுதியில் இருந்து தொடங்குகிறது. மன அழுத்தம் எதிர்காலத்தின் பதற்றம் காரணமாக தங்களை தாங்களே கவனிக்க முடியாமல் போகிறது. முடி உதிர்தலுக்கு இது மட்டும் காரணம் அல்ல பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் இதில் அடங்கும். முதலில் தலைமுடிக்கு தகுந்த கவனிப்பை பெண்கள் செய்தாலே முடி உதிர்தலை கட்டாயம் குறைக்கலாம். முடி உதிர்வை குறைக்க என்ன செய்ய வேண்டும், உதிர்ந்த முடியை மீண்டும் வளரச் செய்ய எந்த இயற்கை முறையை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களின் முன் தலையில் வழுக்கை திட்டுகளில் 15 நாட்களில் முடி வளர இதை செய்யவும். முடி வளர்ச்சி டோனரை உருவாக்குவதற்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு- உங்களிடம் உலர்ந்த ரோஸ்மேரி இலைகள் இருந்தால், இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள், பச்சை ரோஸ்மேரி இருந்தால், அதில் 3-4 மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவில் உள்ளது போல் ரோஸ்மேரி இலைகளை வைத்து வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கும் இந்த முடி வளர்ச்சி டோனர், உங்கள் தலைமுடியில் முடி இல்லாத இடங்களில் மயிர் கால்களுக்கு ஊட்டமளித்து, உதிர்ந்து உடைந்த முடிகளை சரி செய்து மீண்டும் தலைமுடியை 15 நாட்களில் வளரச் செய்யும். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் சில நாட்களிலேயே உங்களுக்கு கிடைக்கும் அதை நீங்களே உணர்வீர்கள்.
மேலும் படிக்க: பெண்களின் ஒட்டு மொத்த தலைமுடி பிரச்சனைக்கு ஒரே தீர்வு வெந்தய சீரம் - வீட்டில் செய்வது எப்படி?
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]