இன்றைய நவீன வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மரபணு காரணிகளால் வயதுக்கு முன்பே நரைமுடி தோன்றுவது நம்மில் பலருக்கும் பொதுவான பிரச்சினையாகிவிட்டது. நரைமுடியால் தோற்ற அழகு குறைந்து, தன்னம்பிக்கை குன்றிய நிலை ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய பலர் இரசாயன சாயங்களையும் ஹேர் டைகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை முடி வளர்ச்சியை பாதிக்கும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. எனவே, இயற்கையான முறையில் நரைமுடியை மறைக்க மருதாணி (ஹென்னா) மற்றும் காபி சிறந்த தீர்வாக அமைகின்றது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முடியின் இயற்கையான நிறத்தை மெலனின் எனப்படும் நிறமி தீர்மானிக்கிறது. வயது அதிகரிக்கும் போது, மெலனின் உற்பத்தி குறைந்து முடி நரைக்கத் தொடங்குகிறது. மேலும், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, புகைப்பழக்கம் மற்றும் ரசாயன முடி சிகிச்சைகளும் நரைமுடிக்கு காரணமாகின்றன.
மருதாணி இயற்கையான முடி நிறமூட்டியாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது முடியை கருமையாக்குவது மட்டுமல்லாமல், பின்வரும் நன்மைகளையும் தருகிறது:
காபி முடியின் நிறத்தை இயற்கையாக கருமையாக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள கஃபீன் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. காபியின் முக்கிய நன்மைகள்:
நரைமுடியை இயற்கையாக மறைக்க இந்த எளிய வீட்டு வழிமுறையை பின்பற்றலாம்.
இரசாயன சாயங்களை விட மருதாணி மற்றும் காபி கலவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. வாரம் ஒரு முறை இந்த கலவையை பயன்படுத்தி, நரைமுடியை இயற்கையாக மறைக்கலாம். மேலும், இது முடியை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். எனவே, பல நன்மைகளை வழங்கும் இந்த இயற்கை முறையை ட்ரை செய்து உங்கள் முடியை பராமரிக்கலாம்.
Image source: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]