herzindagi
image

பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த மைசூர் பருப்பு ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க

நம்முடைய முகத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதற்கு மைசூர் பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ்பேக்குகள் குறித்து இந்தக் குறிப்பில் காணலாம். இதனை நம்முடைய வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்கள் கொண்டு செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.
Editorial
Updated:- 2025-08-25, 14:03 IST

சரும பராமரிப்பு முறை குறித்த ஒரு தெளிவான பார்வை இன்றைய சூழலில் பலரிடம் இருக்கிறது. இதற்காக கடைகளில் இருந்து செயற்கையாக வாங்கப்படும் கிரீம்களை விட இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம் என்று பலரும் விரும்புகின்றனர். அதனடிப்படையில் மைசூர் பருப்பு கொண்டு எவ்வாறு 5 விதமான ஃபேஸ்பேக்குகள் தயாரிக்கலாம் என்று காண்போம்.

மேலும் படிக்க: Pumpkin seeds for hair growth: முடி உதிர்வை தடுக்க உதவும் பூசணி விதைகள்; உங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவும்

 

மைசூர் பருப்பு மற்றும் ரோஸ் வாட்டர்:

 

உங்கள் சருமம் எண்ணெய் பசையுடன் இறுக்கமாக உணரும் நாட்களுக்கு இந்த கலவை சிறந்தது. இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரும். இரண்டு தேக்கரண்டி மைசூர் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை மிருதுவான பசை பதத்திற்கு வரும் வரை கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

Masoor dal

 

மைசூர் பருப்பு மற்றும் கற்றாழை ஜெல்:

 

உங்கள் சருமம் சென்சிடிவ் ஆக இருந்தால், மைசூர் பருப்புடன் இரண்டு தேக்கரண்டி ஃப்ரெஷ் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் தடவவும். கண்களை தவிர்த்து, ஒரு மெல்லிய அடுக்காக பூசி, 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினால் அரை மணி நேரத்தில் மாற்றம் தெரிவதை காணலாம்.

 

மைசூர் பருப்பு, தேன் மற்றும் எலுமிச்சை:

 

மந்தமான சருமத்துடன் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், புத்துணர்ச்சி அளிக்கும் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள். ஏற்கனவே ஊறவைத்த மைசூர் பருப்புடன் 2 தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் தண்ணீரில் கழுவவும். அதன் பிறகு லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க: Skin care: பளபளக்கும் சருமத்திற்கு ஸ்கின் கேர் மட்டும் போதாது; இந்த எளிய உணவுகளை தினந்தோறும் சாப்பிடவும்

 

மைசூர் பருப்பு மற்றும் தயிர்:

 

அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகள் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த புரோபயாடிக் நிறைந்த ஃபேஸ் பேக் ஒரு சிறந்த தீர்வாகும். இரண்டு தேக்கரண்டி தயிருடன் மைசூர் பருப்பைச் சேர்த்து, க்ரீம் பதத்திற்கு வரும் வரை கலந்து, 5 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்யவும். இதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே முயற்சிக்கவும்.

Masoor dal face pack

 

மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள்:

 

முகப்பரு பிரச்சனைகள் இருந்தால், இந்த பாக்டீரியா எதிர்ப்பு ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இது முகப்பருவை அகற்றுவது முதல் பொலிவான சருமத்தை வழங்குவது வரை உதவுகிறது. இந்தக் கலவையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், தெளிவான மற்றும் சீரான சருமத்தை பெறலாம்.

 

இந்த இயற்கையான ஃபேஸ்பேக்குகளை பயன்படுத்தி உங்கள் முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருங்கள்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]