உங்கள் முகம் அழகாக பளபளப்பாக இருக்க வேண்டுமா? முகம் வறட்சியாக இருப்பதற்கு முக்கிய காரணம் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் போவதுதான். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகள், கருப்பு தழும்புகள், பழுப்பு நிறத்தில் முகம் மாறுவது, எண்ணெய் பசை சருமம் என அனைத்திற்கும் காரணம் உடலில் நீர்ச்சத்து இல்லாமை தான். இதை ஒரே ஒரு செய்முறையில் சரி செய்ய முடியும் என்றால் அது ஆவாரம் பூவால் தான் முடியும். பொதுவாக ஆவாரம் பூவில் தங்கச்சத்து இருப்பதாக கிராமப்புறங்களில் சொல்லுவார்கள். ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்று பழமொழி சொல்லும் இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் சார்ந்த நோய்களை சரி செய்யும் வல்லமை கொண்டது ஆவாரம்பூ அதே போல் இந்த ஆவாரம் பூவை முகத்திற்கு பயன்படுத்தினால் உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
மேலும் படிக்க: நெய்யை சூடாக்கி மஞ்சள் கலந்த பேஸ்ட்- ஒரு மணி நேரத்தில் ஹீரோயின் போல ஜொலிக்கலாம் - இப்படி செய்யங்கள்
முகத்தை பொன் போல ஜொலிக்க வைக்கும் வல்லமை கொண்டது ஆவாரம் பூ. அனைத்து வயதினரும் இந்த ஆவாரம் பூ பேஸ் பேக்கை தாராளமாக முகத்திற்கு அப்ளை செய்யலாம். உடல் முழுவதும் பளபளப்பாக இருக்க ஆவாரம்பூ பேஸ்ட்டை தடவி குளிக்கலாம். குறிப்பாக தோளில் வரும் கெட்ட வியர்வைகள் வெளியேறி உடல் முழுவதும் உள்ள பருக்கள் கருப்பு தழும்புகள் துர்நாற்றம் வீசும் சீல் கொண்ட பருக்கள், அனைத்தையும் ஒரு வாரத்தில் சரி செய்யும் வல்லமை கொண்டது இந்த ஆவாரம் பூ.
இப்படி செய்தால் உங்கள் முகம் ஒரே வாரத்தில் மின்னும், முகத்தில் உள்ள கருப்பு தழும்புகள் அழுக்குகள் எண்ணெய் பசை அனைத்தும் சரியாகி பளபளப்பாக ஜொலிக்கும் அளவிற்கு உங்கள் முகம் தயாராகிவிடும்.
இந்த பேஸ் பேக்குகளை வாரத்திற்கு இரண்டு மூன்று முறை நீங்கள் பயன்படுத்தலாம். அதேபோல் குளிப்பதற்கு தயார் செய்த பவுடரை எடுத்து ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது உடல் முழுவதும் தடவி சோப்பு போல பயன்படுத்தி குளிக்கலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]