இன்றைய வாழ்க்கை சூழலில் வயது வரம்பின்றி, இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மோசமான வாழ்க்கை முறையும், உணவு பழக்கங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை கட்டுக்குள் வைத்திருக்க ஆயுள் முழுவதும் மருத்துவ பரிசோதனைகளும் மருந்து மாத்திரைகளும் தேவைப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஒரு சில மாற்றங்களையும் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் காலம் காலமாக சீனர்கள் பின்பற்றி வரும் ஒரு பழங்கால வைத்தியத்தை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். மாவிலைகள் சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி ஆஸ்துமா போன்ற பல பிரச்சனைகளுக்கும் நன்மை பயக்கின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் பெக்டின் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளையும் கட்டுப்படுத்துகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: மாதுளை தோலில் இவ்வளவு சத்துக்களா, தெரிஞ்சா இனி தூக்கி எறியவே மாட்டீங்க!
மாவிலைகளை எடுத்துக் கொள்ளும் முறை
தேவையான பொருட்கள்
- மாவிலை 5-8
- தண்ணீர் - 150மில்லி
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மாவிலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- இலையின் சாறு இறங்கி தண்ணீரின் நிறம் மாறும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும்.
- இந்த தண்ணீரை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.
- மறுநாள் காலையில், உணவுக்கு முன் இதை எடுத்துக் கொள்ளலாம்.
- உணவுக்கு முன் இந்த நீரை தினமும் குடித்து வந்தால் மூன்று மாதத்தில் நல்ல விளைவுகளை காணலாம்.
குறிப்பு
ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து விளைவுகள் மாறுபடும். எனவே இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்வதற்கு முன் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: தீராத நோய்களை தீர்க்கும் தேங்காய் பூ, இதன் நன்மைகளை தெரிந்தால் அசந்திருவீங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation