குளிர்காலத்தில் சருமம் மிகவும் வறண்டு, பொலிவற்று காட்சியளிக்கும். இதை சரிசெய்ய, குளிர்காலத்தில் சருமத்தை கூடுதலாக கவனிப்பது அவசியம். இதை முறையாக செய்ய தவறும் போது முகத்தில் வறட்சி ஏற்படுகிறது. இந்த சீசனில், பளபளப்பான சருமத்தைப் பெற பல வகையான அழகு கிரீம்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பெண்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தியும் நல்ல பலன் கிடைக்கிறதா? என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான்.
ஆனால், அதிக பணத்தை செலவழிக்காமலே குளிர்காலத்தில் சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம். அதற்கு கிரீன் டீ இலை எனச் சொல்லப்படும் பச்சை தேயிலை பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, நல்ல உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு கிரீன் டீயை பலரும் குடிக்கின்றனர். அதே போல், முக அழகு மற்றும் சருமத்திற்கும் கிரீன் டீ இலையை பயன்படுத்தலாம். பிரபல அழகுக்கலை நிபுணர் ரேணு மகேஸ்வரி, கிரீன் டீ இலையை சருமத்திற்கு பயன்படுத்தும் முறை குறித்து இந்த பதிவில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
கிரீன் டீ இலையால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்
பளபளப்பான சருமத்திற்கு கிரீன் டீ இலைகளால் செய்யப்பட்ட பேக்கை பயன்படுத்தலாம். இதில் சருமத்தைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. கிரீன் டீ இலைகள், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் புள்ளிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
- கிரீன் டீ இலை
- 1 ஆரஞ்சு பழத்தின் தோல்
- ரோஸ் வாட்டர்
பயன்படுத்தும் முறை
- கிரீன் டீ இலை மற்றும் ஆரஞ்சு தோலை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி, அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேக்கை தயார் செய்யவும்.
- இந்த ஃபேஸ் பேக் மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயம் அதிகம் தண்ணீர் கலந்தும் இருக்கக்கூடாது. சரியான பக்குவத்தில் பேஸ்ட் போல் கலந்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது ஃபேஸ் பேக் தயார். இதுவும் உதவலாம்.முகப் பொலிவுக்கு உதவும் ஃபேஸ் பேக்
- முகத்தை நன்கு கழுவி துடைக்கவும்.
- பின்பு இந்த பேக்கை முகத்தில் தடவி, 25 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- காய்ந்ததும், சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும்.
- இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும், 1 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
கிரீன் டீ இலையால் கிடைக்கும் நன்மைகள்
- சருமத்தில் ஏற்படும் சிவப்பான தடிப்புகள் போன்றவற்றை குறைக்கிறது.
- கிரீன் டீ இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் எரிச்சல், சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. முகத்தை சுத்தம் செய்வதோடு, பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
- சருமத்துளைகள் அதிகமாக திறப்பதைத் தடுக்கிறது.
இதுவும் உதவலாம்.இரவில் பயன்படுத்த வேண்டிய பேஸ் பேக்கா? அது என்ன?
- கிரீன் டீ இலையை பயன்படுத்தினால், சருமத்தில் அதிக துளைகள் திறப்பது தடுக்கப்படும். இதனால் தோல் வெடிப்பு, பருக்கள் போன்ற பிரச்சனைகளும் குறையும்
முக்கியமான விஷயம்
ஏற்கெனவே, நீங்கள் சருமப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation