
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களிலும் கூட சில பகுதிகளில் குளிர் வாட்டி வதைக்கும் சூழலில் பல உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்துள்ள காய்கறிகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளைக் குறைப்பதற்கு சூப்கள் செய்து சாப்பிடுவது நல்லது. இந்த சூழலில் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ப்ரோலிக்கோலி சூப் எப்படி செய்வது? இதில் உள்ள நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
நாள்பட்ட நோய்களைத் தீர்ப்பது முதல் இதய ஆரோக்கியம் சீராக இயங்குவது வரை உதவியாக இருக்கும் ப்ரோக்கோலியைக் கொண்டு சூப் செய்வதற்கு முதலில் என்னென்ன பொருட்கள் தேவை என தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க : குளிர்காலத்தில் நோய் நொடியில்லாமல் வாழ; கேரட் இஞ்சி சூப் செய்வது எப்படி?
மேலும் படிக்க : ஆந்திரா ஸ்பெஷல் பூத்தரேக்கலு; வீட்டில் செய்து பாருங்க ரெசிபி இதோ
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, செலினியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் க்ளுகோசினோலைட்ஸ் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளதாக ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி தைராய்டு, கேன்சர், முடக்கு வாதம் போன்ற நாள்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ப்ரோக்கோலியை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு அனைத்து மார்க்கெட்டிலும் ஈஸியாக கிடைப்பதால் அடிக்கடிக்கூட உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]